செவ்வாய், 27 மார்ச், 2012

ஏன் வந்தார் வைகுண்டர் (பகுதி - 2)

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றையும் தத்துவத்தையும் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி நாகர்கோவிலில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் இரண்டாம் பாகம்.

ஏன் வந்தார் வைகுண்டர் (பகுதி - 1)

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றையும் தத்துவத்தையும் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி நாகர்கோவிலில் 2012 மார்ச் மாதம் 11-ம் தேதி் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முதற்பாகம்.

வெள்ளி, 23 மார்ச், 2012

கருத்தரங்கம்

நண்பர்களே, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமும் தேசிய நாடகப் பள்ளியும் இணைந்து நடத்தும் நாடகக் கலைஞர் பாதல் சர்காரின் நாடக பங்களிப்பு குறித்த தேசிய கருத்தரங்கம் மார்த்தாண்டத்தில் நடைபெறுகிறது.

இடம்: சுமங்கலி திருமண மண்டபம், மார்த்தாண்டம்.

நாள்: 25-03-2012, ஞாயிற்றுக்கிழமை

புகைப்பட கண்காட்சி திறப்பு: காலை 11.00 மணி
கருத்தரங்கம்: மாலை 2.00 மணி

பங்கேற்பாளர்கள்:
நாடகாசிரியர்: அஸ்வகோஷ்
நாடக செயற்பாட்டாளர்கள்: பிரளயன், அ.மங்கை
சமுதாய அமைப்பிலிருந்து: எம்.ஜி வெங்கடேஷ்
கலை விமர்சகர்: சதானந்த் மேனன்
தேசிய நாடகப் பள்ளி பெங்களூரு மண்டல இயக்குநர்: சுரேஷ் அனஹள்ளி
தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர்
: எஸ். கருணா

தமுஎகச உங்களது பங்கேற்பை வரவேற்கிறது.