செவ்வாய், 3 ஜூலை, 2012

குமரியில் திரைப்பயணம் 2


மார்த்தாண்டம் கல்லூரியில் தமுஎகச குறும்பட திரையிடல்

  கல்லூரி முதல்வர் ராய் பேசுகிறார்
  கல்லூரி பேராசிரியர் குமாரசெல்வா பேசுகிறார்
தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
மிக்கேல்ராஜ் பேசுகிறார்

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் குறும்பட திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமுஎகச தமிழகம் முழுவதும் திசைகள் எட்டும் திரைகள் ஆகட்டும் என்ற முழக்கத்தோடு குறும்படங்கள் திரையிடும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த்துறையோடு இணைந்து இந்த திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தமிழ்துறைத் தலைவர் மகிழ் உல்டா கமலம் தலைமை தாங்கினார். பேராசிரியர் குமார செல்வா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராய் வாழ்த்துரை வழங்கினார். தமுஎகச குமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மிக்கேல்ராஜ் குறுந்திரை ஒரு பார்வை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து சென்ஸ், நடந்த கதை, அஃறிணைகள், கிரியா, என்கண்ணே, காற்றில் அலையும் கேள்விகள் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட படங்கள் குறித்து விவாதமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் முதுநிலைத்துறை தலைவர் பிறீடா மேபல் ராணி, பேராசிரியர்கள் சஜன், ஸ்டீபன்சன், தமுஎகச குமரி மாவட்டத் துணைச்செயலாளர் விடியல் குமரேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குமரியில் திரைப்பயணம் 1

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமுஎகச தமிழகம் முழுவதும் திசைகள் எட்டும் திரைகள் ஆகட்டும் என்ற முழக்கத்தோடு குறும்படங்கள் திரையிடும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.


இதன் ஒருபகுதியாக கொட்டாரத்தில் 2012 ஜூன் 30 ம் தேதி மாலை7 மணி முதல் 8.30 வரை டாக்டர் ராஜசேகரன்  வீட்டு வளாகத்தில் திரையிடல் நடைபெற்றது. 
இதற்கு கிளைத்தலைவர் திரு ஏ ஆர் ஜே. கண்ணா அவர்கள் தலைமை வகித்தார்.  கிளைச் செயலாளர் கவிஞர் ஈ.விஜய் அவர்கள் வரவேற்றார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் க.கணேசன்  அறிமுகவுரையுடன்  பல குறும்படங்கள் திரையிடப்பட்டன.
இத் திரையிடல் நிகழ்ச்சியில் டாக்டர் திரு ராஜசேகரன், கவிஞர் நாரண தொல்காப்பியன், டாக்டர் ஏ.எம் அரசு, ஒவியர் சித்திரத் தமிழ்தாசன், பேராசிரியை  திருமதி கஸ்தூரி, திரு ராஜ சிபு, எல் ஐ சி முகவர் திரு ஏ வி சன்முகம், பேரா .ராமசுந்தரம், செந்தில் ஆனநத், குறும்பட இயக்குநர் சி.கிறிஸ்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திரையிடலில்,மனப்பாட முறையின் கேட்டை விளக்கும் 'மக்கப் மங்கம்மா' விளையாட்டும்  கல்வியையும் ஒருசேர பெற்று படிக்கவேண்டிய குழந்தைகள்  குடும்ப பொறுப்பை சுமக்க குழந்தைத் தொழிலுக்கு தள்ளப்டும் நிலை பற்றி 'கிகீ' படம், உயர்ஜாதி தெருவில் செருப்பு அணிய முடியாத கொடுமையின் கனவும் அந்த தீண்டாமைக்கு எதிராக எதிர்க்கும் மனோ தைரியமும்  வெளிப்படுத்தும் எழுத்தாளர் அழகிய பெரியவனின் 'குறடு ' சிறுகதையை 'நடந்த கதை' என்ற படம்,மது மோசம் என்று நாயிக்குத் தெரியும் விஷயம் கூட மனிதனுக்குத் தெரிவதில்லையே என்பதை சித்தரிக்கும் 'சென்ஸ்'என்ற படம், பெரியவர்களுக்குத் தெரியாத சில அணுகுமுறைகள் கூட சிறுவர்களுக்கு அமைந்திருப்பதை விளக்கும் 'கிரியா' என்ற படமும் திரையிடப்பட்டன். 
இறுதியாக கொட்டாரம்  தமிழ்நாடு முறபோக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின்  இணைச்செயலாளர் திரு. சி.செல்வன் நன்றியுரை வழங்கினார்.