தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி
தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான சிறந்த சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் 14-வது ஆண்டு நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சியை ஒட்டி, தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைப் போட்டியை தொடர்ந்து நடத்திவருகிறது.
விதிமுறைகள்
Ø சிறுகதைகள் தமிழனின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும்.
Ø சிறுகதைகள் தினமணி கதிரில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகாதவையாகவும் சொந்தக் கற்பனையில் உருவானவையாக இருப்பதோடு அதற்கான உறுதிமொழியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
Ø கதைகள் வெள்ளைத் தாளில் ஒருபக்கம் மட்டுமே தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் அல்லது மின் அச்சு அல்லது தட்டச்சு செய்து அனுப்பலாம்.
Ø ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையும் எழுதலாம்.
Ø போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
Ø கடைசி தேதி ஜூன் மாதம் 4-ம் தேதி.
Ø போட்டி முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் பிரசுரிக்கப்படும்.
Ø போட்டி தொடர்பாக கடிதப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான பரிசு விவரம்.
முதல் பரிசு ரூ.10,000
2-ம் பரிசு ரூ.5,000
3-ம் பரிசு ரூ.2,500
5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.1,250.
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி
தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி,
தினமணி நாளிதழ்,
எண்-29, 2-வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை-600058.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக